Sunday 5th of May 2024 07:50:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து எரிக் சொல்ஹெய்ம் பேச்சு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து எரிக் சொல்ஹெய்ம் பேச்சு!


இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் நோர்வே குழுவின் விசேட தூதராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் ,தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினாா்.

தமிழக முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகின் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் பசுமை செயற்றிட்டங்களில் இந்தியா மற்றும் தமிழ்நாடு எவ்வாறு முன்னிலை வகிக்க முடியும்? என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான நோர்வேதூதா் ஹன்ஸ் ஜேகப் பிஃரைடன்லண்ட், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், பொதுத்துறை செயலாளா் டி.ஜெகநாதன், சென்னையில் உள்ள நோர்வே கெளரவத் தூதா் அரவிந்த் கோபிநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

எரிக் சொல்ஹெய்ம் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் தலைவராகவும்,நோர்வே அமைச்சராகவும் இருந்தவா். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்துள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE